ம.தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கம்
- ராமநாதபுரத்தில் ம.தி.மு.க சார்பில் கையெழுத்து இயக்கம் நடந்தது.
- இதனை மாவட்ட செயலாளர் வி.கே.சுரேஷ் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்ட மன்றத்தின் செயல்பாடுகளுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி முட்டுக்கட்டை போடுகிறார். அரசியல் சட்டத்தின் முகவுரையில் சொல்லப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக பேசி வருகிறார்.
அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவிப் பிரமாணத்தை ஆளுநர் ரவி மீறி வருகிறார். பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளான கவர்னரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
அதனை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 29-வது பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் கவர்னர் ஆர்.என்.ரவியை பொறுப்பில் இருந்து அகற்றக்கோரி கையெழுத்து இயக்க நிகழ்ச்சி ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ வழிகாட்டுதலின் படி, முதன்மைச் செயலாளர் துரை வைகோ ஆலோச னையின்படி ராமநாதபுரம மாவட்ட ம.தி.மு.க சார்பில் அரண்மனை முன்பு காலை கையெழுத்து இயக்கம் நடந்தது. இதனை மாவட் செயலாளர் வி.கே.சுரேஷ் தொடங்கி வைத்து பேசினார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் பிரகாஷம் தலைமை வகித்தார். மாநில தணிக்கைக்குழு உறுப்பினர் குணா, முன்னாள் மாவட்ட செயலாளர் பேட்ரிக், மாநில இளைஞரணி துணைச்்செயலாளர் கராத்தே பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர் வைண்டிங் சுப்பிரமணி வரவேற்புரை ஆற்றினார்.
இதில் மாவட்ட துணைச்செயலாளர்கள் சரவணன், பாஸ்கரன், பிச்சை சுகநாதன், மங்க ளேசுவரி முத்துக்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் செந்தில், சடாச்சரம், பொதுக்குழு உறுப்பினர்கள் அப்துல் ஹக்,நித்தியானந்த்,சத்தியேந்திரன்,மனோகரன்,கெவிக்குமார், சந்திரன், டைசன், குத்புதீன், ஞானப்பிரகாசம், நகரச்செயலாளர்கள் சங்கு துரை (கீழக்கரை).
பிச்சை மணி (பரமக்குடி), வெள்ளைச்சாமி (ராமேசுவரம்),ஒன்றிய செயலாளர்கள் கதிர்வேல் (கமுதி),ஜோதி (மண்டபம் மேற்கு), லூக்காஸ் (மண்ட பம் கிழக்கு), உதயசூரியன் (நயினார் கோவில்), உதயக் குமார் (பரமக்குடி), நாக பாண்டி (கமுதி), நாகராஜ் (சாயல்குடி),சிங்கார செல்வம் (திருவாடானை கிழக்கு),வேலுச்சாமி (முதுகுளத்தூர்), பாண்டித்துரை (ராஜசிங்கமங்கலம்).
பிர்தௌஸ்கான் (ராமநாதபுரம்),ஜெகதீஸ் பாண்டியன் (போகலூர்), இளையராஜா (திருப்புல்லாணி), மாநில தொண்டரணி துணைச் செயலாளர் முனியராஜ், விவசாய அணி துணைச் செயலாளர் முருகேச பாண்டியன், திருப்புல்லாணி செல்வராஜ்,மாணவரணி துணைச்செயலாளர் பாலகணேஷ், நெசவாளர் அணி துணைச்செயலாளர் சீனிவாசன்.
ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி இணையதள பொறுப்பாளர் எம்.சி வெற்றிவேல், திருவாடானை நூருல் ஹசன்,முதுகுளத்தூர் வழிவிட்டான்,ஒன்றிய பொருளாளர் செய்யது இபுறாம்ஷா,கவியரசன்,சிவசுந்தர்,மாதவன்,முகம்மது அப்துல் ஹக்,வல்லக்குளம் தாஜீதீன், மண்டபம் கிழக்கு ஒன்றிய துணைச்செயலாளர் ஜேம்ஸ், உச்சிப்புளி வேலுச் சாமி, தங்கச்சி மடம் ஜோசப் தாஸ்,கமுதி சரத்குமார்,பரமக்குடி பாலகிருஷ்ணன்.
கூட்டணி கட்சி நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நகர் தலைவர் கோபி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் முகமது யாசின்,பி.ஐ.சி.எம் தாலுகா செயலாளர் செல்வராஜ், திராவிடர் கழகம் மாவட்ட செயலாளர் அண்ணா ரவி, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் புவனேஸ்வரன், மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார், மாவட்ட துணைச்செயலாளர் சுரேஷ், எஸ்.டி.பி.ஐ அப்துல் ஜமீல், நஜ்முதீன்,பெரியார் பேரவை நாகேஸ்வரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முடிவில் பொதுக்குழு உறுப்பினர் மனோகரன் நன்றி கூறினார்.