உள்ளூர் செய்திகள்

மரக்கன்று நடும் விழா

Published On 2022-10-01 10:02 GMT   |   Update On 2022-10-01 10:02 GMT
  • காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா நடந்தது.
  • முதுகுளத்தூர் தாலுகா குமாரகுறிச்சி கிராமத்தில் முத்தமிழ் அறக்கட்டளை சார்பில் நடந்தது.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா குமாரகுறிச்சி கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முத்தமிழ் அறக்கட்டளை சார்பில் மரக்கன்று நடுவிழா ஊராட்சி மன்ற தொடக்கப்பள்ளியில் நடந்தது. அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன் வரவேற்றார். இதில் சிறப்பு விருந்தினராக தலைமை ஆசிரியர் நாகவள்ளி, ஆசிரியைகள் வாகிதா யாஸ்மின், மாதவி, செவிலியர் ரஞ்சிதா கலந்து கொண்டனர். அறக்கட்டளை உறுப்பினர்கள் முத்து லட்சுமணன், ஹரிஷ்குமார் உள்ளிட்ட பலர் பங்ககேற்றனர். மகாத்மா காந்தியின் சிறப்பு குறித்து பள்ளி மாணவ- மாணவிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.

Tags:    

Similar News