உள்ளூர் செய்திகள்

விழாவில் விருது வழங்கப்பட்ட காட்சி.

தாதனேந்தல் ஊராட்சிக்கு பி.வி.எம். அறக்கட்டளை சார்பில் விருதுகள்

Published On 2023-10-12 09:28 GMT   |   Update On 2023-10-12 09:28 GMT
  • தாதனேந்தல் ஊராட்சிக்கு பி.வி.எம். அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
  • சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊரா ட்சி ஒன்றியம் தாத னேந்தல் ஊராட்சிக்கு ட்பட்ட பள்ளபச்சேரி கிராமத்தில் பி.வி.எம். மனநல காப்பகம் திறப்பு விழா நிகழ்ச்சி நடந்தது. அப்போது நேஷனல் பிரஸ் அண்ட் மீடியா பெடரேசன், புல னாய்வு எக்ஸ்பிரஸ் இதழ் மற்றும் பி.வி.எம் அறக்கட் டளை நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர்.அப்துல் ரசாக் பி.வி.எம். மருத்துவ சேவை அணியின் ஆய்வு பரிந்துரையை ஏற்று திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் தாதனேந்தல் ஊராட்சி மன்ற தலைவர் டாக்டர் கோகிலா ராஜேந்தி ரனுக்கு ஊராட்சி மகாராணி விருது, தாதனேந்தல் சிறந்த ஊராட்சி விருது, சேவை திலகம் விருது ஆகிய மூன்று விருதுகளை வழங்கி பாராட்டினார்.

இதில் பி.வி.எம். மருத்துவ சேவை அணி, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர், நகர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு வாழ்த் துக்களை தெரிவித்தனர்.

இதே போல் ராமநாதபுரம் மாவட்ட மாற்றுத்திற னாளிகளின் நல அலுவலர் ஆர்.பாலசுந்த ரத்தின் சேவையை பாராட்டி நம்பிக்கை சிகரம் விருதும், சென்னை மாற்றுத்திறனாளி நல அலுவலர் முனைவர் கதிர்வேலுவின் மக்கள் சேவை பணிக்காக நம்பிக்கை இமய விருதும் வழங்கப்பட்டது. மேலும் பட்டயம், கேடயம், சிறப்பு மலர் மற்றும் சால்வை அணிவித்து கவுரவிக்கப் பட்டனர்.

இதில் துறை அலுவ லர்கள், மாவட்ட தொண்டு நிறுவன இயக்குனர்கள் கலந்து கொண்டனர். பி.வி.எம். அறக்கட்டளை திறப்பு விழாவை சிறப்பாக நடத்திய நிறுவனர் தேசிய விருதாளர் டாக்டர் அப்துல் ரசாக்கை பொது மக்கள் பாராட்டினர். கொடையாளர்கள், அரசு அதிகாரிகள், வருவாய் துறையினர், காவல் துறையினர், தொழிலதி பர்கள், மரு த்துவர்கள், வழக்க றிஞர்கள்,அரசியல் பிரமுகர்கள், ஜமாத்தார்கள், கிராம தலைவர்கள்,சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.அவர்களது சேவை பணியை பாராட்டி விருது, பதக்கம் மற்றும் கேடயம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News