உள்ளூர் செய்திகள்

பா.ம.க. செயற்குழு கூட்டம்

Published On 2023-07-01 14:02 IST   |   Update On 2023-07-01 14:02:00 IST
  • ராமநாதபுரத்தில் பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது.
  • டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

கீழக்கரை

ராமநாதபுரத்தில் பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கிம் தலைமை தாங்கி னார். மாவட்ட தலைவர் சந்தனதாஸ், மாவட்ட அமைப்பு தலைவர் ஜீவா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் நகரச் செயலாளர் பாலா வரவேற்றார். மாவட்ட இளைஞர் சங்க செயலாளர். மாவட்ட மாணவர் சங்கர் செயலாளர் சந்தோஷ் தீர்மானத்தை நிறைவேற்றி னார். துல்கர் நன்றி கூறினார்.

சிறப்பு விருந்தினராக கவிஞர் செஞ்சி சின்னசாமி கலந்து கொண்டார். கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட அலுவலகம் முன்பிருந்த டாஸ்மாக் கடையை அகற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்வது, அதற்கு உறுதுணையாக இருந்து கலெக்டர் விஷ்ணு சந்திரன், போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கேணிக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல் ஆகியோருக்கு நன்றி தெரிவிப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது.

மேலும் ராமநாதபுரம் பஸ் நிலையம் அருகில், முருகன் கோவில் முன்புள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என கலெக்டரிடம் கோரிக்கை வைப்பது என முடிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்விற்கு கீழக்கரை ஒன்றிய செயலாளர் லோகநாதன் ராமநாதபுரம் ஒன்றிய செயலாளர் பொறி யாளர் ஷரீப், கடலாடி ஒன்றிய செய லாளர் இருளாண்டி, ஒன்றிய தலைவர் காளி முத்து ஒன்றிய துணைச் செயலா ளர் முனியசாமி, ராமநாத புரம் ஒன்றிய இளைஞர் சங்க செயலாளர் கார்த்திக் இளைஞர் சங்கத் தலைவர் முனியசாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டம் முடிந்த பின் கலெக்டர் விஷ்ணு சந்திரனை சந்தித்த நிர்வாகிகள் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் எழுதிய சுக்கா மிளகா சமூக நீதி? என்ற புத்தகத்தை வழங்கி நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News