உள்ளூர் செய்திகள்

ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம்

Published On 2023-04-04 08:05 GMT   |   Update On 2023-04-04 08:05 GMT
  • ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
  • இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 310 மனுக்கள் பெறப்பட்டன.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் குறித்த 310 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களுக்கு உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஒருமாத காலத்திற்குள் மனுதாரர்களுக்கு தீர்வு வழங்க வேண்டும், தீர்வு வழங்க முடியாத மனுக்களின் நிலை குறித்து மனுதாரர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) மாரிச்செல்வி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News