உள்ளூர் செய்திகள்

கோவில் பூசாரிகள் நல சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.

கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும்

Published On 2022-11-16 07:43 GMT   |   Update On 2022-11-16 07:43 GMT
  • கோவில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • மாவட்ட தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

சாயல்குடி

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி சமத்துவபுரம் பகுதியில் கோவில் பூசாரிகள் நல சங்க மாவட்ட மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. தென் மண்டல தலைவர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

மாநில ஆலோசனை குழு உறுப்பினர் முருகேசன், மாவட்ட செயலாளர் பஞ்சவர்ணம் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ராமநாதபுரம் மாவ ட்டத்தில் அதிக அளவில் ஓய்வு பெற்ற பூசாரிகள் இருப்பதால் தமிழக அரசிடம் ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பம் செய்து உள்ளனர். தகுதியான பூசாரிகள் விண்ணப்பத்தை தேர்வு செய்து ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பூசாரிகள் நல வாரியத்திற்கு அலுவல்சாரா உறுப்பினர்களை தமிழக அரசு விரைந்து நியமனம் செய்ய வேண்டும். இந்து சமய அறநிலைத்துறை மூலம் பூசாரிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவே ற்றப்பட்டன.

பொறுப்பாளர்கள் ராமநாதபுரம் மாவட்டத் துணைத் தலைவர் பொன் முனியசாமி, கடலாடி ஒன்றிய செயலாளர் லோகநாதன், மாவட்ட துணை செயலாளர் அய்யனகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் ராமமூர்த்தி நன்றி கூறினார்.

Tags:    

Similar News