புதிதாக கட்டப்பட்ட நவீன தொழில் நுட்ப மையங்கள்
- ரூ.104 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட நவீன தொழில் நுட்ப மையங்கள்.
- மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி அலுவலர் விஜயகுமார் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம்
தமிழக முதல்-அமைச்சர் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு பல எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார். குறிப்பாக தொழிற்பயிற்சி நிலையங்களில் பயின்று வரும் மாணவ-மாணவி களின் மீது அக்கறை கொண்டு அவர்களின் கல்வித்தரத்தினை மேம்படுத்திடும் வகையில் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அதனடிப்படையில், மாணவர்கள் தொழிற்பயிற்சி பெறுவதன் மூலம் வேலைக்கேற்ற திறனைப் பெற்று தகுதி யான வேலைவாய்ப்பை பெறவும், தங்களது சமூக பொருளாதார நிலையை உயர்த்திக் கொள்ளவும் இயலும் என்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொழிற்பயிற்சி நிலையங்கள், தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறையால் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் மாண வர்களின் வேலைவாய்ப்பு பெறும் திறன் அதிகரிக்கும். இத்தகைய தொழில்திறன் பெற்ற மனிதவளத்தை உருவாக்கிட புதிய அரசினர் தொழிற்பயிற்சி நிலை யங்களை தொடங்குதல், அவற்றின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், புதிய தொழிற்பிரிவுகளை தொடங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் தற்போது பிட்டர், டர்னர், மெசினிஸ்ட், எலக்ட்ரிசன், வெல்டர், ஏ.சி. மெக்கானிக் போன்ற 78 பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. மாறிவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப எதிர்கால வேலைவாய்ப்பினை தமிழ்நாட்டு இளைஞர்கள் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் 4.0 தரத்திலான திறன் பயிற்சிகளை வழங்கும் வகையில் தொழில் நுட்ப மையங்களாக தரம் உயர்த்த திட்டமிடப்பட்டதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 தரத்திலான புதிய தொழில் நுட்பங்களுடன் கூடிய எந்திரங்கள், உபகரணங்கள் மற்றும் மென்பொருட் களுடன் நிறுவப்பட்டு ரோபோட்டிக்ஸ் இண்டஸ்ட்டிரியல் ஆட்டோ மேஷன் மேனுபேக்சரிங் பிராசஸ் கண்டரோல், அட்வான்ஸ்டு ஆட்டோ மொபைல் டெக்னாலஜி போன்ற நவீன திறன் பயிற்சிகள் மாணவர்க ளுக்கும், தொழில் பயிற்சி நிலைய பயிற்றுநர்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.103.95 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட தொழில் 4.0 தொழில்நுட்ப மையங்களை தமிழக முதல்-அமைச்சர் காணொளிக்காட்சிகள் மூலம் திறந்து வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர் ஆகிய இடங்களில் செயல்பட்டுவரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து தொழில் 4.0 என்னும் தொழில்நுட்ப மையங்கள் தலா ரூ.34.65 கோடி மதிப்பீட்டில் 3 தொழிற்பயிற்சி மையங்களிலும், ரூ.103.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு தமிழக முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தொழில் பயிற்சி பெற்று 312 மாணவ, மாணவிகள் பயன் பெறுவர். இதன் மூலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் மாணவ, மாணவிகள் தங்கள் விருப்பத்திற்குரிய தொழில் கல்விகளை தேர்வு செய்து பயன்பெற இத்திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.
மேற்கண்ட தகவலை ராமநாதபுரம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, உதவி அலுவலர் விஜயகுமார் தெரிவித்துள்ளனர்.