முடங்கி கிடந்த முதுகுளத்தூர் முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது
- முடங்கி கிடந்த முதுகுளத்தூர் முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசினார்.
- கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகள் நிரந்தர பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தேவர் கல்லூரியில் பிற்பட்டோர் நல மாணவியர் விடுதி திறப்பு விழா நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன் தலைமை தாங்கினார். மக்கள் தொடர்பு அலுவலா் பாண்டி வரவேற்றர். மாணவியர் விடுதியை அமைச்சர் ராஜகண்ணப்பன் திறந்து வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
முடங்கி கிடந்த முதுகுளத் தூர் தொகுதி முன்னேறிய தொகுதியாக மாறிவருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் அனைவரும் சமம். கட்சி பாகுபாடு இல்லாமல் மக்களின் தேவைகள் நிறை வேற்றப்பட்டு வருகின்றன. கமுதி மற்றும் முதுகு ளத்தூருக்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
காவிரி குடிநீர் பிரச்சினை ஒரு ஆண்டில் முழுமையாக தீரும். பொது மக்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இங்கேயே ஒவ்வொரு வருக்கும் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பளம் கிடைக்கும் வகையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
கமுதியில் பாலிடெக்னிக் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கடலாடியில் தொழிற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டு வருகிறது.
கமுதி, முதுகுளத்தூர், கடலாடி பகுதிகள் நிரந்தர பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவர் கல்லூ ரியில் கூடுதல் பாடப்பி ரிவுகள் கொண்டுவரவும், காலி இடங்களை நிரப்பவும், புதிய கட்டிட வசதிகள் செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. முருகவேல், கமுதி பேரூராட்சி சேர்மன் அப்துல் வஹாப் சகாரணி, ஒன்றிய செயலாளர்கள் முதுகுளத்தூர்பூபதி மணி, கோவிந்தராஜ், கடலாடி ஆறுமுகவேல், சாயல்குடி குலாம் முகைதீன், ஜெயபால், மணலூர் ராமர், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கல்லூரி முதல்வர் அருணாசலம் நன்றி கூறினார்.=