உள்ளூர் செய்திகள்

தி.மு.க.வின் கரங்களை பலப்படுத்துவோம்-எஸ்.டி.பி.ஐ.

Published On 2023-06-23 14:18 IST   |   Update On 2023-06-23 14:18:00 IST
  • தி.மு.க.வின் கரங்களை பலப்படுத்துவோம்.
  • எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் பேசினார்.

ராமநாதபுரம்

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) கட்சியின் 15-வது ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் பெரியபட்டினத்தில் அந்த கட்சியின் சார்பில் மாவட்டத்தலைவர் ரியாஸ்கான் கட்சிக்கொடியை ஏற்றி பேசினார்.

கீழக்கரையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, கட்சிக்கொடியை ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இதுகுறித்து மாவட்டத்தலைவர் ரியாஸ்கான் கூறுகையில், தற்போது மோடி தலைமையிலான அரசு தி.மு.க.வை முடக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தி.மு.க. மவுனமாக உள்ளது. அடுத்தடுத்து அமைச்சர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்ற அச்சம் தி.மு.க.வுக்கு உள்ளது.

தி.மு.க. கரங்களை பலப்படுத்த எஸ்.டி.பி.ஐ. துணை நிற்கும் என்றார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் மாவட்ட, தொகுதி, நகர் நிர்வாகிகள் செயல்வீரர்கள், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

ராமநாதபுரம் கிழக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி ஊடக பொறுப்பாளர் சுபைர் ஆப்தீன் மற்றும் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்தனர்.

Tags:    

Similar News