உள்ளூர் செய்திகள்

பட்டமளிப்பு விழா நடைபெற்றபோது எடுத்த படம்.

பரமக்குடி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

Published On 2023-04-14 09:27 GMT   |   Update On 2023-04-14 09:27 GMT
  • பரமக்குடி அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது.
  • இளைஞர்கள் தங்களுக்குள் லட்சியத்தை வளர்க்க வேண்டும் துணைவேந்தர் பேசினார்.

பரமக்குடி

பரமக்குடி அரசு கலைக்கல்லூரியில் 20, 21 மற்றும் 22-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா 2 நாட்கள் நடைபெற்றது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் மேகலா தலைமை தாங்கினார்.

முதல் நாள் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் 600 மாணவர்களுக்கு பட்டங் களை அழகப்பா பல்கலைக் கழக துணைவேந்தர் ரவி வழங்கி பேசினார். அவர் கூறியதாவது:-

பட்டப்படிப்பு என்பது கடினமான பயணத்தின் முடிவல்ல, ஆனால் பிரகாச மான எதிர்காலத்திற்கான வாக்குறுதிகளுடன் கூடிய அழகான பயணத்தின் ஆரம்பம்.

பெரிய உலகிற்கு அடி யெடுத்து வைக்கும் போது, சமுதாயம் மற்றும் தேசத்தின் நன்மைக்காக உழைக்க உறுதிமொழி எடுத்துக் கொள்ளுங்கள். பெற்றோர் கள் தியாகத்தால் நீங்கள் பட்டதாரி ஆகி உள்ளீர்கள்.

மனித வாழ்வில் அடை யும் நீண்ட செயல்பா ட்டின் முதல் படி இலக்கை நிர்ண யித்தல். இலக்கை நிர்ண யித்த பிறகு, இளைஞர்கள் தன்னம்பி க்கையின் நேர் மறையான லட்சியத்தை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

2-வது நாள் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் சென்னை பல்கலைக்கழக மத்திய கருவி மற்றும் சேவை ஆய்வக இயற்பியல் துறை யின் தலைவர் நெடுமாறன் கலந்து கொண்டு 1200 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

Tags:    

Similar News