உள்ளூர் செய்திகள்

பள்ளியில் தீ விபத்து ஒத்திகை

Published On 2023-07-23 08:18 GMT   |   Update On 2023-07-23 08:18 GMT
  • பள்ளியில் தீ விபத்து ஒத்திகை நடந்தது.
  • ஒத்திகையும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

முதுகுளத்தூர்

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா செல்வநாயகபுரம் அரசு மேல்நிலை பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தீவிபத்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. நிலைய அலுவலர் கா.வெங்கடேஷ் தலைமையில், மார்ட்டின் ஸ்டிபன் ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. இதில் நிலைய காவலர்கள் தமிழ்வாணன், கஜேந்திரகுமார், பாலமுருகன், பாரதிதாசன் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகளுக்கு தீ தடுப்பு குறித்து ஒத்திகையும் செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

Tags:    

Similar News