உள்ளூர் செய்திகள்

த.மு.மு.க. சார்பில் ரத்ததான முகாம்

Published On 2023-10-09 08:37 GMT   |   Update On 2023-10-09 08:37 GMT
  • த.மு.மு.க. சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
  • மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா பங்கேற்றார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் தாலுகா ஆனந்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் தமிழ்நாடு முஸ் லிம் முன்னேற்றக் கழகம் ஆனந்தூர் கிளை மற்றும் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர். இந்த முகாமிற்கு ம.ம.க. மாவட்ட தலைவர் பட்டாணி மீரான் தலைமை வகித்தார். மருத்துவ அணி மாவட்ட செயலாளர் கோட்டார் கலந்து கொண்டு வரவேற் றார். ரத்ததான முகாமில் ம.ம.க. மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜிப்ரி ரத்த தான முகாமை தொடங்கி வைத்தார்.

முகாமிற்கு த.மு.மு.க. தொண்டி மாநில செயலாளர் சாதிக் பாட்ஷா, தலைமை பிரதிநிதி ஜெயி னுல் ஆபுதீன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் முனீஸ்வரி, ஆர்.எஸ்.மங்க லம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News