உள்ளூர் செய்திகள்

நாட்டு நலப்பணி திட்ட முகாம்

Published On 2023-10-05 08:19 GMT   |   Update On 2023-10-05 08:19 GMT
  • ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடந்தது
  • விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.

பசும்பொன்

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இதில் விழிப்புணர்வு பேரணியை அபிராமம் கல்வி பொறுப்பு கழக தலைவர் ஹபீப் முகம்மது தொடங்கி வைத்தார். பேரணி பள்ளி வளாகத்திலிருந்து நத்தம் பஸ் நிறுத்தம் வரை சென்று மீண்டும் பள்ளியை அடைந்தது. மழை நீர் சேகரிப்பின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி சென்றனர்.

பள்ளி செயலாளர் அஷ்ரப் ஜுனைத், தாளாளர் அகமது நைனார், தலைமை ஆசிரியர் உசேன், நிர்வாக குழு உறுப்பினர்கள் பேரணியில் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் முகமது இக்பால், உதவி திட்ட அலுவலர்கள் அலி அக்பர் ரியாஸ், அப்துல் ஹமீது உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

அதேபோல் கமுதி கே.என்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் முகாமில் மாணவர்கள் தூய்மைப் பணி செய்தனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிமுத்து தலைமையில் போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை நாட்டு நலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளர் வினோத்குமார் ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Tags:    

Similar News