உள்ளூர் செய்திகள்

பாகம்பிரியாள் கோவிலில் ரூ.26 லட்சம் உண்டியல் வசூல்

Published On 2022-11-25 08:31 GMT   |   Update On 2022-11-25 08:31 GMT
  • திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோவிலில் ரூ.26 லட்சம் உண்டியல் வசூலானது.
  • இதில் ரூ. 26 லட்சத்தி 70 ஆயிரத்து 630-ம், 219 கிராம் 300 மில்லி கிராம் தங்கமும், 514 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள திருவெற்றியூரில், சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட வல்மீகநாதர் சமேத பாகம்பிரியாள் அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்த தெய்வமாகக் கருதப்படும் இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபாடு செய்கின்றனர். செவ்வாய், வியாழக்கிழமைகளில் கோவிலில் தங்கியிருந்து தெப்பக்குளத்தில் நீராடி நேர்த்திக்கடனாக தங்கம், வெள்ளி உலோகத்தில் உருவம் செய்து உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் செலுத்திய உண்டியல்கள் திறந்து எண்ணும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத்துறையின் உதவி ஆணையர் தனசேகரன் தலைமையில் நடந்தது. தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆய்வாளர் சண்முக சுந்தரம், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தரராஜன் முன்னிலையில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இதில் ரூ. 26 லட்சத்தி 70 ஆயிரத்து 630-ம், 219 கிராம் 300 மில்லி கிராம் தங்கமும், 514 கிராம் வெள்ளியும் கிடைத்தது.

Tags:    

Similar News