உள்ளூர் செய்திகள்

லாட்ஜ் உரிமையாளர்களுடன் நடந்த ஆலோசனை கூட்டம்.

ஏர்வாடியை குப்பையில்லா நகரமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும்

Published On 2023-06-10 09:42 GMT   |   Update On 2023-06-10 09:42 GMT
  • ஏர்வாடியை குப்பையில்லா நகரமாக மாற்ற ஒத்துழைக்க வேண்டும் என கீழக்கரை வட்டாட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
  • கடைக்காரர்கள்தான் சாலையில் கொட்டுகிறார்கள்.

கீழக்கரை

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் பிரசித்தி பெற்ற ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி ஏர்வாடி பகுதியில் உள்ள லாட்ஜ் உரிமையாளர் களுடனான ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் வட்டாட்சியர் பழனிக்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

தங்கும் விடுதியில் இருந்து குப்பைகளை வெளியே கொட்டக்கூடாது. நகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் குப்பைகளை போட வேண்டும். சுற்றுப்புறம் சுகாதாரமாக இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஏர்வாடியை குப்பையில்லா நகரமாக்க லாட்ஜ் உரிமையாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது லாட்ஜ் உரிமையாளர்கள் கூறும்போது, குப்பைகளை நாங்கள் வெளியில் கொட்டுவதில்லை. டீ கப், பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்டவைகளை இதர கடைக்காரர்கள் தான்சாலை யில் கொட்டுகிறார்கள்.

போலீசார் லாட்ஜ் முன்பு நிறுத்தப்படும் வாகன ங்களை அப்புறப்படுத்து கிறார்கள். ஆனால் போக்கு வரத்துக்கு இடையூறாக கடைகளை வைக்க போலீசார் அனுமதிக் கிறார்கள். இதற்கு உரிய தீர்வு காண வேண்டும் என்றனர். அப்போது வட்டாட்சியர் பழனிக்குமார், போலீசாரி டம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

கூட்டத்தில் வருவாய் கோட்டாட்சியர் பரமசிவன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News