உள்ளூர் செய்திகள்

சிறந்த மாணவர்களுக்கு பரிசளிப்பு

Published On 2023-11-06 07:56 GMT   |   Update On 2023-11-06 07:56 GMT
  • ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் சிறந்த மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
  • இதற்கான ஏற்பாடுகளை வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.

ராமநாதபுரம்

ரெகுநாதபுரம் வல்லபை அய்யப்பன் கோவிலில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு புத்தா டைகள் மற்றும் அன்னதா னம் வழங்கும் விழா ராமையா சுவாமி தலைமை தாங்கினார். கண்ணபிரான் வரவேற்று பேசினார்.

அறக்கட்டளையின் சேவைகள் பற்றி உறுப்பி னர்கள் எடுத்துரைத்தனர்.அறக்கட்டளையின் செயல்பாடுகள் பற்றி குருநாதர் ஆர்.ஈஸ்.மோகன் விளக்க உரையாற்றினார்.ராமநாதபுரம் ராமலிங்கா அன்பு இல்ல நிர்வாகி ஏற்புரையாற்றினார்.

விழாவில் 10,12-ம் வகுப்புகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ராஜசேகரன் நினைவு கல்விப் பரிசும், பாராட்டு சான்றிதழ் மற்றும் ரொக்கப் பணமும் வழங்கினார்.

பின்னர் ஆதரவற்ற குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு புத்தா டைகள் வழங்கப்பட்டது. சிறப்பு பூஜை முடிந்த பிறகு அன்ன தானம் வழங்கப் பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் ரெகுநாதபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் பழனி கலந்து கொண்டு சிறப்பித் தார். இதில் ராமநாதபுரம் மாவட்டம் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராள மான பக்தர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொ ண்டனர். இதற்கான ஏற்பாடு களை வல்லபை அய்யப்பா சேவை நிலைய அறக்கட்டளை நிர்வாகிகள் செய்தனர்.

Tags:    

Similar News