உள்ளூர் செய்திகள்
- மீனவர் மீது தாக்குதல் நடத்தினர்.
- தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளார்.
தொண்டி
தொண்டி அருகே உள்ள புதுப்பட்டினம்- கண்கொள்ளான் கடலோர கிராமத்தை சேர்ந்தவர் முத்துசெல்வன்(40). மீனவ சங்க செயலாளரான இவர் சம்பவத்தன்று நாட்டு படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றார்.
அப்போது மகாசக்திபுரத்தை சேர்ந்த சில மீனவர்கள் வலைகளை சேதப்படுத்தி முத்துசெல்வத்தை தாக்கியதாக தெரிகிறது. படுகாயமடைந்த அவர் திருவாடனை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவத்தால் 2 மீனவ கிராமங்கள் இடையே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தேவிபட்டினம் கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யனார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்துள்ளார்.