உள்ளூர் செய்திகள்
- கீழக்கரை செய்யது ஹமீதா கல்லூரியில் மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கல் விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளரும், கணிதவியல் துறை தலைவருமான விக்னேஷ்குமார் செய்திருந்தார்.
கீழக்கரை
கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்ற நேர்முகத் தேர்வில் வெற்றி பெற்ற இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி முதல்வர் சதக்கத்துல்லா தலைமையில் நடந்தது.
இதில் இன்போசிஸ், டி.வி.எஸ்., எச்.டி.எப்.சி. மற்றும் க்யு ஸ்பைடர் மென்பொருள் நிறுவனம் உள்பட பல நிறுவனங்களின் வளாக தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு முஹம்மது சதக் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ஹாமிது இப்ராஹிம் பணி நியமன சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரியின் வேலைவாய்ப்பு மைய ஒருங்கிணைப்பாளரும், கணிதவியல் துறை தலைவருமான விக்னேஷ்குமார் செய்திருந்தார்.