உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு யாதவ மகா சபை ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் நியமனம்

Published On 2023-04-02 14:40 IST   |   Update On 2023-04-02 14:40:00 IST
  • ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்பட்டார்.
  • தலைவர் புத்தேந்தல் குரு.பிரகலாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு மாதவன் நன்றி தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டம் போகலூரை சேர்ந்த மாதவன் தமிழ்நாடு யாதவ மகா சபையின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி தலைவராக நியமனமிக்கப் பட்டுள்ளார். அவர் மாநில பொதுச் செயலாளர் வேலு மனோகரனை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இளைஞரணி தலைவராக நியமனம் செய்து சமுதாய பணியாற்ற வாய்ப்பளித்த மாநில தலைவர் நாசே ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் வேலு மனோகரன், பரிந்துரை செய்த மாவட்ட தலைவர் புத்தேந்தல் குரு.பிரகலாதன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு மாதவன் நன்றி தெரிவித்தார்.

Tags:    

Similar News