உள்ளூர் செய்திகள்

அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

Published On 2023-04-06 08:30 GMT   |   Update On 2023-04-06 08:30 GMT
  • பரமக்குடியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
  • வார்டு செயலாளர் நாகராஜன், நயினார்கோவில் சிவக்குமார் உள்பட கலந்து கொண்டனர்.

பரமக்குடி

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தனியார் மண்டபத்தில் அ.தி.மு.க. ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனிய சாமி முன்னிலையில் அ.ம.மு.க. பரமக்குடி ஒன்றிய செயலாளர் செந்தில்குமார் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர்.

மாவட்ட இளைஞரணி செயலாளர் ஏழுமலையான், பரமக்குடி தெற்கு நகர் செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ராஜீவ்காந்தி, பொதுக்குழு உறுப்பினர் தங்கமணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் குணசேகரன்.

மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் ராஜா, அவைத்தலைவர் சங்கிலி, இணைச் செயலாளர் வனிதா தேவி, நிர்வாகிகள் உஷா, அர்ஜு னன், கிருஷ்ண பரமாத்மா, முனியசாமி, செல்வி, சசிகலா, கணேசன், பூமி நாதன், சிங்கம்துரை, அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் ரகு வீரபாண்டியன் மற்றும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. முத்தையா, பரமக்குடி ஒன்றிய செயலாளர் முத்தையா, கமுதி ஒன்றிய செயலாளர் காளிமுத்து, மாவட்ட துணைச் செய லாளர் பாதுஷா, பரமக்குடி நகரச்செயலாளர் ஜமால், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைச்செயலாளர் தங்கவேலு.

ஒன்றிய கவுன்சிலர் சுப்பிரமணியன், மாவட்ட தகவல்தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சரவணக்குமார், காட்டுப் பரமக்குடி வார்டு செயலாளர் நாகராஜன், நயினார்கோவில் சிவக்குமார் உள்பட கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News