உள்ளூர் செய்திகள்

கல்வித்துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட வேண்டும்

Published On 2023-04-20 08:18 GMT   |   Update On 2023-04-20 08:18 GMT
  • ராமநாதபுரத்தில் கல்வித்துறை அலுவலகங்கள் ஒரே இடத்தில் செயல்பட வேண்டும்.
  • ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தினர்.

ராமநாதபுரம்

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கி ணைப்பாளருமான முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் தலைமை அலுவலகமான முதன்மை கல்வி அலுவலகம் கடந்த பல ஆண்டுகளாக அரண்ம னை பகுதியில் வாடகைக் கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது பழைய மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வருகிறது.

3 ஆண்டுகளுக்கு முன்பு முதன்மை கல்வி அலுவல கத்தில் உள்ள ஆவண காப்பக அறையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் பல ஆவணங்கள் எரிந்து சாம்ப லானது. தற்போது அந்த அறை சீரமைக்கப்பட்டு மீண்டும் முதன்மைக்கல்வி அலுவலகம் அந்த கட்டி டத்திலேயே இயங்கி வருகிறது.

ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவல கம் ஓம் சக்தி நகரில் உள்ள ஒரு அரசு நடுநிலைப்பள்ளி கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ராமநாதபுரம் மாவட்ட கல்வி அலுவலகம் (இடைநிலைக்கல்வி) பழைய கலெக்டர் அலுவலக பழைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது. அதேபோல் கல்வித்து றையின் துணை திட்டமான ஆர்.எம்.எஸ்.ஏ. அலுவலகம், மாவட்ட உடற்கல்வி இயக்கு நர் அலுவலம், தனியார் மெட்ரிக் பள்ளி மாவட்ட கல்வி அலுவலகம், மாவட்ட தேர்வுத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் ஆகியவை ராமநாதபுரத்தில் தனித்தனியாக இயங்கி வருகின்றன. மேலும் ஜெ.ஆர்.சி., பசுமைப்படை, சுற்றுச்சூழல் மன்றம், சாலை பாதுகாப்பு மன்றம், தொன்மை பாதுகாப்பு மன்றம் போன்ற அலுவல கங்களும் ராமநாதபுரத்தில் இயங்கி வருகின்றன.

எனவே ராமநாதபுரம் மாவட்ட கல்வித்துறையின் பெரும்பாலான செயல்பாடு களுக்கு தனியார் பள்ளி நிர்வாகத்தையே சார்ந்து உள்ளது. இதனை தவிர்க்கும் வகையில் ராமநாதபுரத்தில் கல்வித்துறை அலுவலகங் களை ஒரே இடத்தில் அமைத்து செயல்பட செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News