உள்ளூர் செய்திகள்

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 71 பேர் தேர்ச்சி

Published On 2023-06-21 14:06 IST   |   Update On 2023-06-21 14:06:00 IST
  • ராமநாதபுரம் மாவட்டத்தில் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 71 பேர் தேர்ச்சி அடைந்தனர்.
  • தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளது.

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் 71 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து இந்தாண்டு 178 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். நீட் தேர்வில் 71 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் தேர்ச்சி சதவீதம் 39.88 ஆகும்.

இதில் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் மாதிரி அரசு மேல்நி லைப்பள்ளி மாணவர் சீனிவாசன் 720-க்கு 492 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், ஆர்.காவனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி சர்மிலி 414 மதிப்பெண்கள் பெற்றும் 2ம் இடத்தையும், ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் செந்தாமரை கண்ணன் 411 மதிப்பெண் கள் பெற்று 3-ம் இடமும், காடர்ந்தகுடி அரசு மேல் நிலைப்பள்ளி மாணவி திலகசர்மி 363 மதிப்பெண் கள் பெற்று 4-ம் இடமும் பெற்றுள்ளனர்.

மாவட்டத்தில் முதல் 13ம் இடங்களை பெற்ற மாணவ, மாணவிகள் அனைவரும் ஏற்கனவே பிளஸ் 2 தேர்வை முடித்து, நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி பெற்று இந்தாண்டு தேர்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து கூறுகையில், கடந்த ஆண்டு அரசு மேல்நிலைப்பள்ளிகளில் இருந்து 278 மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதி 90 பேர் தேர்ச்சி பெற்றனர்.

ஆனால் இந்த ஆண்டு தேர்வு எழுதிய வர்களின் எண்ணிக்கை கடந்தாண்டை விட குறைவாக இருந்தாலும் தேர்ச்சி சதவீதம் அதிக ரித்துள்ளது என்றார்.

Tags:    

Similar News