உள்ளூர் செய்திகள்

கெட்டுப்போன 12 கிலோ மீன்கள் பறிமுதல்

Published On 2023-11-17 07:41 GMT   |   Update On 2023-11-17 07:41 GMT
  • கெட்டுப்போன 12 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • உணவு பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

தொண்டி

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடற்கரை பகுதியில் இயங்கி வரும் தினசரி மீன் மார்க்கெட்டில் பார்மலின் எனும் ரசாயனம் கலந்த மீன்கள் விற்கப்படு வதாக உணவு பாது காப்புத்துறை அதிகாரி களுக்கு புகார் வந்தது.

இதனையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் ஜெயராஜ், மீன்வளத்துறை ஆய்வாளர் அபுதாஹிர், மீன்வள சார் ஆய்வாளர் அய்யனார் மற்றும் அதிகாரிகள் மீன் மார்க்கெட்டில் திடீர் சோதனை நடத்தினர். இதனால் மீன் வியாபாரிகள், அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் நடத்திய சோதனையில் பார்மலின் எனும் ரசாயனம் மீன்களில் கலக்கப்பட வில்லை என உறுதி செய்தனர். மேலும் கெட்டுப்போ ன 12 கிலோ மீன்களை கண்டறிந்து அதனை பினாயில் ஊற்றி அழித்தனர். இது போன்ற கெட்டுப்போன மீன்களை வாங்கி விற்க வேண்டாம் என மீன் வியாபாரிகளுக்கு அறிவுறுத்திய அதிகாரிகள் அனைவரும் உணவு பாதுகாப்பு சான்றிதழ் பெற வேண்டும் என்றும் இதுபோல ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்து சென்றனர்.இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.

Tags:    

Similar News