உள்ளூர் செய்திகள்

சிறையில் இறந்த தங்கச்சாமி குடும்பத்தினருக்கு ராஜா எம்.எல்.ஏ. நிதி உதவி வழங்கிய காட்சி.

பாளை சிறையில் இறந்த வாலிபர் குடும்பத்திற்கு ராஜா எம்.எல்.ஏ. நிதி உதவி

Published On 2023-06-18 14:18 IST   |   Update On 2023-06-18 14:18:00 IST
  • சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
  • ராஜா எம்.எல்.ஏ., உயிரிழந்த தங்கச்சாமியின் தாயார் கருப்பியை சந்தித்து ஆறுதல் கூறினார்.

புளியங்குடி:

புளியங்குடியில் மது பாட்டில் விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பாளை சிறையில் அடைக்கப்பட்ட தங்கச்சாமி(வயது 26) உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சாவில் மர்மம் இருப்பதாக கூறி அவரது உறவினர்கள் கடந்த 4 நாட்களாக உடலை வாங்க மறுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா, உயிரிழந்த தங்கச்சாமியின் தாயார் கருப்பி மற்றும் சகோதரர் ஈஸ்வரன் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர் அவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி வழங்கினார். மேலும் சட்டப்படி தேவையான அனைத்து உதவிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்தார். அப்போது புளியங்குடி நகர தி.மு.க. செயலாளர் அந்தோணிசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் வேல்சாமி பாண்டியன், பத்திரம் சாகுல் ஹமீது மற்றும் நிர்வாகிகள் சுரேஷ், ஆசை கனி, மாரிசெல்வம், குகன், நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் உட்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News