உள்ளூர் செய்திகள்

ஆய்வகத்தில் மயங்கிய மாணவர்களுக்கு சிகிச்சை

Published On 2022-08-18 08:34 GMT   |   Update On 2022-08-18 08:34 GMT
  • ஆய்வகத்தில் மயங்கிய மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது
  • பயிற்சியில் ஈடுபட்ட ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே வாராப்பூர் அரசு மேல் நிலைப்பள்ளி உள்ளது. சம்பவத்தன்று பள்ளி ஆய்வகத்தில் பயிற்சியில் ஈடுபட்ட ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள், காப்பர் சல்பேட் என்ற திரவ பொருளை தவறுதலாக சோதனையின்போது உட்கொண்டு மயக்க நிலையில் கிடந்தனர். இதைப்பார்த்த சக மாணவர்கள் கொடுத்த தகவலின் பேரில், ஆசிரியர்கள் விரைந்து சென்று 4 பேரையும் மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்வம் குறித்து தகவலறிந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பின ர் முத்துராஜா நேரில் சந்தித்து பார்வையிட்டு உரிய சிகிச்சையை அளிக்கும்படி மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார்.

Tags:    

Similar News