உள்ளூர் செய்திகள்

கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

Published On 2022-08-18 14:07 IST   |   Update On 2022-08-18 14:07:00 IST
  • கிணற்றில் தவறி விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
  • குடிநீர் எடுத்த போது நடந்த சம்பவம்

புதுக்கோட்டை:

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையம்பட்டி கிராமத்தை சேர்ந்த வெள்ளையன் மகன் வெள்ளைச்சாமி (வயது 48) கூலித் தொழிலாளியான இவர், 30 அடி ஆழமுள்ள கிணற்றில் குடத்துடன் இறங்கி குடிதண்ணீர் எடுத்துக்கொண்டு திரும்பும் பொழுது, குடத்துடன் தடுமாறி கிணற்றில் விழுந்துள்ளார். அக்கம் பக்கம்தினார் கொடுத்த தகவல்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், கிணற்றில் இறங்கி சடலமாக கிடந்த வெள்ளைச்சாமியின் உடலை மீட்டனர். இச்சம்பவம் குறித்து காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News