உள்ளூர் செய்திகள்
- கடையில் திருட முயன்றவர் கைது செய்யப்பட்டார்
- கேளர மாநிலத்தை சேர்ந்தவர்
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீழாத்தூர் சமத்துவபுரத்தை சேர்ந்த குமார் மனைவி உஷா (வயது 30 ) இவர் பெட்டிக்கடை வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது பெட்டிக்கடையில் கடந்த ஐந்தாம் தேதி மாலை கேரளா மாநிலம் இடுக்கி தெங்கக்கல் வண்டிப்பெரியார் விழாமலை எஸ்டேட் பகுதியை சேர்ந்த அகஸ்டின் மகன் ஜார்ஜ் (வயது 43) என்ற நபர் திருடமுயன்றார். இதனை பார்த்த பொதுமக்கள், அவரை பிடித்து வடகாடு போலீசில் ஒப்படைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ்குமார் வழக்கு பதிவு அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.