உள்ளூர் செய்திகள்
விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழப்பு
- விபத்தில் காயமடைந்த வாலிபர் உயிரிழந்தார்
- மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தார்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே கீரமங்கலம் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் சிவஞானம் மகன் சிற்றரசு (வயது 35) ஏசி மெக்கானிக்கா இவர், இரு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் பேராவூரணி சென்றுள்ளார். அப்போது கரம்பக்காடு அருகே சென்றபோது, மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் காயம் அடைந்த அவர், திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.