உள்ளூர் செய்திகள்

வழிகாட்டி பலகை மீது பஸ் மோதிய விபத்தில் புதுக்கோட்டை வாலிபர் பலி

Published On 2022-08-08 06:34 GMT   |   Update On 2022-08-08 06:34 GMT
  • வழிகாட்டி பலகை மீது பஸ் மோதிய விபத்தில் புதுக்கோட்டை வாலிபர் பலியானார்
  • 5 பேர் காயமடைந்தனர்

புதுக்கோட்டை:

சென்னையை அடுத்த தாம்பரத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி மாநகர பஸ் சென்றது. பரங்கிமலையில் இருந்து ஆலந்தூர் கத்திப்பாரா மெட்ரோ ரெயில் நிலைய பஸ் நிறுத்தம் பகுதிக்கு செல்ல சாலை வளைவில் திரும்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், சாலை வளைவுபகுதியில் நெடுஞ்சாலை துறையால் வைக்கப்பட்டு இருந்த வழிகாட்டி பெயர் பலகை ராட்சத இரும்பு தூண் மீது பங்கரமாக மோதியது.

இதில் பெயர் பலகையுடன் ராட்சத தூண் சரிந்து சலையின் குறுக்கே இருபக்கமுமாக விழுந்தது. அப்போது கிண்டி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள், மற்றும் மீனம்பாக்கம் நோக்கி சென்ற மினிவேன் மீது வழிகாட்டி பெயர் பலகை விழுந்தது. இதில் வழிகாட்டி பெயர் பலகைக்கு அடியில் மோட்டார் சைக்கிளுடன் சிக்கிய புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள இளஞ்சாவூரை சேர்ந்த சண்முக சுந்தரம் (வயது 28) படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

மேலும் மினிவேன் டிரைவர் உட்பட பயணிகள் 5 பேர் காயமடைந்தனர்.

இது பற்றி தகவல் அறிந்து வந்த பரங்கிமை போலீசார் ஆபத்தான நிலையில் இருந்த சண்முகசுந்தரத்தை மீட்டு ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த சண்முக சுந்தரத்திற்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News