உள்ளூர் செய்திகள்

புத்தகதிருவிழாவை காண செல்லும் மாணவர்கள்

Published On 2022-08-08 08:52 GMT   |   Update On 2022-08-08 08:52 GMT
  • புதுகை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.
  • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா, சின்ன ராஜா ஆகியோர் செய்து இருந்தனர்.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடக்கும் புதுகை புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர் மன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த புத்தகத் திருவிழாவில் கந்தர்வகோட்டை, அரியாணி பட்டி, மஞ்சப்பேட்டை ஆகிய ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு கந்தர்வ–கோட்டை வட்டார கல்வி அலுவலர் வெங்க–டேஸ்வரி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்விஜய–லட்சுமி முன்னிலை வகி–த்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறிவியல் இயக்க வட்டார தலைவர் ரகமதுல்லா, சின்ன ராஜா ஆகியோர் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News