கந்தர்வகோட்டையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம்
- கந்தர்வகோட்டையில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது
- தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்று வெள்ளை முனியன் கோவில் திடலில் நிறைவடைந்தது.
கந்தர்வகோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கிய ஊர்வலம் நகரின் முக்கிய வீதி வழியாக சென்று வெள்ளை முனியன் கோவில் திடலில் நிறைவடைந்தது. தொடர்ந்து கோவில் திடலில் சங்க மாநில மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பொதுக்கூட்டத்தில் சங்கத்தின் தோற்றம், நோக்கம், வளர்ச்சி, சங்க உறுப்பினர்களின் கடமைகள், எதிர்காலத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ( பொறுப்பு) சியாமளா தேவி அறிவுறுத்தலின்படி, டி.எஸ்.பி. ராகவி மேற்பார்வையில், கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் செய்திருந்தனர்.