உள்ளூர் செய்திகள்

சாலையோர வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம்

Published On 2022-08-06 14:26 IST   |   Update On 2022-08-06 14:26:00 IST
  • சாலையோர வியாபாரிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
  • வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை

புதுக்கோட்டை:

பொன்னமராவதியில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சியின் செயல் அலுவலர் கணேசன் தலைமையில் நடைபெற்றது இதில் அவர் பேசும் போது, நெகிழி பொருட்கள் ஒழிப்பு, சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் வங்கி கடன்களை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுதல், போக்குவரத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் வியாபாரம் செய்தல், தகுதி உள்ள சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்குதல், நகரத்தின் தூய்மைகளை பாதுகாக்க குப்பைகளை பிரித்து வழங்குதல் ஆகியன குறித்து பேசினார். கூட்டத்தில் வி.ஆர்.எம்.சாத்தையா, கண்ணன், செளந்தரம் உள்ளிட்ட சாலையோர வியாபாரிகள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் பழனிச்சாமி, பன்னீர்செல்வம், குழு மேற்பார்வையாளர்கள் வினோத், சதீஷ், பரப்புரையாளர்கள் சங்கீதா, சம்பூர்ண பிரியா, உள்ளிட்டோ பங்கேற்றனர்.

Tags:    

Similar News