மாணவர்கள் சாலை மறியல் போராட்டம்
- மாணவர்கள் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
- கூடுதல் பேருந்து சேவை கோரி நடந்தது
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வ கோட்டையிலிருந்து பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் கூடுதல் பேருந்து வசதி கேட்டு கடந்த ஆறு மாதமாக அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் அரசு பள்ளி, பாலிடெக்னிக், கல்லூரி மற்றும் அரசு விடுதி மாணவ, மாணவிகள் , காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து வசதி கேட்டு கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து வந்த கந்தர்வகோட்டை பணிமனை மேலாளர் தாமோதரன் கந்தர்வகோட்டை ஆய்வாளர் செந்தில் மாறன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களின் பிரதிநிதிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார்கள் இதனால் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் கந்தர்வகோட்டையில் இருந்து தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, திருச்சி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.