உள்ளூர் செய்திகள்
- ஆலங்குடி பகுதியில் மழை பெய்தது
- இந்த மழையால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஆலங்குடி,
ஆலங்குடி பகுதியில் கலந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் பெரும்பாலான பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் பருவமழையின் தொடக்கமாக நேற்று மாலை ஆலங்குடி பகுதியில் திடீரென கருமேகம் சூழ்ந்து மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கிராமப்புறங்களில் தண்ணீர் இன்றி வாடிய பயிர்களுக்கு இந்த மழை பெரிதும் உதவியாக இருந்தது. கடும் வெயிலால் பெரும் அவதிப்பட்டு வந்த நிலையில் திடீரென பெய்த இந்த மழையால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர்.