உள்ளூர் செய்திகள்

மயானத்திற்கு சாலை வசதி வேண்டி பொது மக்கள் கோரிக்கை

Published On 2022-07-28 10:03 GMT   |   Update On 2022-07-28 10:03 GMT
  • ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி தெற்குதோப்புபட்டி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
  • வயது முதிர்வு காரணமாக இறந்தவரின் உடல் அடக்கம் செய்ய பொதுமக்கள் தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக எடுத்து சென்றனர்.

புதுக்கோட்டை :

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை ஊராட்சி தெற்குதோப்புபட்டி கிராமத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு மயான கரைக்கு செல்லும் சாலை வசதி இல்லாததால் கடந்த பல ஆண்டுகளாக தனியாருக்கு சொந்தமான இடத்தின் வழியாக இறந்தவர்களின் உடலை எடுத்துச் சென்று வருகின்றனர்.இதனால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

நேற்றைய தினம் கிராமத்தில் வயது முதிர்வு காரணமாக இறந்தவரின் உடல் அடக்கம் செய்ய பொதுமக்கள் தனியாருக்கு சொந்தமான வயல் வழியாக எடுத்து சென்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது .

எனவே மயானத்திற்கு செல்ல உடனடியாக தார்சாலை அமைத்து தர வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News