உள்ளூர் செய்திகள்

போதை பொருள் பயன்படுத்துபவர், விற்பவரை அடையாளம் காட்ட வேண்டும்-அமைச்சர் ரகுபதி பேட்டி

Published On 2022-08-12 14:10 IST   |   Update On 2022-08-12 14:10:00 IST
  • போதை பொருள் பயன்படுத்துபவர், விற்பவரை அடையாளம் காட்ட வேண்டும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை, பொன்னமராவதி மற்றும் திருமயம் ஆகிய பகுதிகளில் அரசு பள்ளிகளில் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுது. இதில் அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பேரணிைய தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் முழுவதும் போதை பொருட்களை முழுமையாக ஒழிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் சிறப்பு கூட்டம் நடத்தியுள்ளார். அதன் மூலம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் அவலுவலர்களுக்கு தெரிவித்துள்ளார்.

போதை பொருட்கள் எந்த மாநிலத்திலிருந்தும், எந்த ரூபத்தில் நுழைந்தாலும் அதைத்தடுத்தாக வேண்டும். போதை பொருள் விற்பனை செய்வோரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

போதை பொருள் பயன்படுத்துபவரை, விற்பவரை மக்கள் அடையாளம் காட்ட வேண்டும்.

காவல்துறையினரும் தங்களது கடமைகளை உணர்ந்து செய்பட ேவண்டும். போதை பொருட்கள் பயன்பாட்டை தடுப்பதற்காகவே தமிழகத்தில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் செய்படுகின்றன. இவற்றை 2 மாவட்டங்களுக்கு ஒரு நீதிமன்றம் வீதம் உருவாக்குவதற்கு தமிழக முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தமிழகத்தில் போதை பொருட்களை விற்பவர்கள் மீதும், அதற்கு உறுதுணையாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை ஒழிக்க நீதிமன்ற உத்தரவுபடி கருத்துக்கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டு, அதன் பிறகு இதை முழுமையாக ஒழிக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டுவரப்படும்.

நிச்சயம் தமிழகத்தில் ஆன்லைன் ரம்பி ஒழிக்கப்படும். ஆன்லைன் ரம்மி விளம்பரத்தில் நடிக்கும் நடிகர்களாகவே பார்த்து திருந்த வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

Tags:    

Similar News