உள்ளூர் செய்திகள்

மனவிரக்தியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2022-09-21 11:38 IST   |   Update On 2022-09-21 11:38:00 IST
  • மனவிரக்தியில் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
  • மனவிரக்தியில் இருந்து வந்துள்ளார்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே உள்ள அரையப்பட்டி கருவான்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 40). இவரது மனைவி கடந்த சில சில ஆண்டுகளுக்கு முன்பாக இறந்துவிட்டார். இதனால் மனவிரக்தியில் இருந்து வந்த குமாரை, ஆலங்குடி அருகே உள்ள உருமநாதபுரத்தில் உள்ள உறவினர் ஒருவர் அழைத்து வந்து தங்கவைத்திருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் உள்ள உத்திரத்தில் சேலையால் தூக்கிட்டுக் கொண்டார். இதனை பா ர்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மரு த்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஆலங்குடி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் நதியா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News