உள்ளூர் செய்திகள்

கறம்பக்குடியில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிப்பு

Published On 2022-12-25 14:09 IST   |   Update On 2022-12-25 14:09:00 IST
  • கறம்பக்குடியில் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
  • அ.இ.அ.தி.மு.க. ஈ.பி.எஸ் அணி சார்பில் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தபட்டது

கறம்பக்குடி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் மற்றும் நகர அ.இ.அ.தி.மு.க. ஈ.பி.எஸ் அணி சார்பில் அ.தி.மு.க. நிறுவன தலைவர் எம்.ஜிஆரின் 35-வது நினைவு தினத்தை முன்னிட்டு கரம்பக்குடி சீனி கடை முக்கத்திலிருந்து ஒன்றிய செயலாளர்கள் சொக்கலிங்கம், கணேசன் மற்றும் நகர செயலாளர் விவேகானந்தன் ஆகியோர் தலைமையில் ஊர்வலமாக சென்று மீன் மார்க்கெட்டில் உள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி சாகுல் ஹமீது, தீத்தானிபட்டி ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினம், குபேந்திரன், பல்லவராயன், முருகேசன், பந்துவக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கணேசன், வாண்டான விடுதி ஒன்றிய கவுன்சிலர் திருநாவுக்கரசு, ராஜேந்திரன், ஒன்றிய பொருளாளர் பழனியப்பன், புது விடுதி சுலைமான் தகவல் தொடர்பு செயலாளர் முத்துசாமி, சேகர் மற்றும் ஒன்றிய நகர நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.




Tags:    

Similar News