உள்ளூர் செய்திகள்

லாட்டரி சீட்டு விற்றவர் கைது

Published On 2022-08-17 14:22 IST   |   Update On 2022-08-17 14:22:00 IST
  • லாட்டரி சீட்டு விற்றவர் கைது செய்யப்பட்டார்
  • போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

புதுக்கோட்டை:

ஆலங்குடி கடைவீதியில் லாட்டரி சீட்டு விற்பதாக ஆலங்குடி காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனை தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர். அப்போது பாரதிநகரை சேர்ந்த செல்வம் மகன் மணிகண்டன் (வயது 25) மூன்று இலக்க லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதை பார்த்த போலீசார், அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்த ரூ.16 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News