உள்ளூர் செய்திகள்
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
- லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்
- அவரிடமிருந்து ரூ.2,920 மற்றும் 3 நம்பர் சீட்டுகளை பறிமுதல்
புதுக்கோட்டை:
ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி கிடைத்த ரகசிய தகவலின் பேரில். ஆலங்குடி பகுதியில் தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுக்குளம் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்றுக்கொண்டிருந்த மேல நெம்பமக்கோட்டையை சேர்ந்த முருகன் (வயது 49) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.2,920 மற்றும் 3 நம்பர் சீட்டுகளை பறிமுதல் செய்து ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.