உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது

Published On 2022-10-28 11:30 IST   |   Update On 2022-10-28 11:30:00 IST
  • சட்ட விரோதமாக மது விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
  • ரோந்து பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்

புதுக்கோட்டை:

ஆலங்குடி கலைஞர் காலனியைச்சேர்ந்தவர் கணேசன் மகன் மணிவண்ணன் (வயது 35) இவர் ஆலங்குடி மேகலா தியேட்டர் டாஸ்மாக்கடை எதிரில் சட்ட விரோதமாக மது விற்றுக் கொண்டிருந்தார். அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி போலீசார் இதனை பார்த்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 21 மது பாட்டில்களை பறிமுதல் ெசய்தனர். பின்னர் அவரை ஆலங்குடி காவல் நிலையம் கொண்டு வந்தனர் ஆலங்குடி காவல் ஆய்வாளர் அழகம்மை வழக்கு பதிவு செய்து வி சாரித்து வருகிறார்.

Tags:    

Similar News