உள்ளூர் செய்திகள்

ரேஷன் அரிசி கடத்தியவர் கைது

Published On 2023-03-17 12:08 IST   |   Update On 2023-03-17 12:08:00 IST
  • ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
  • 2,150 கிலோ பறிமுதல்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கே.புதுப்பட்டி அருகே கல்லூரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 58). இவர் தனது சரக்கு ஆட்டோவில் வம்பரம்பட்டி பகுதியில் 2,150 கிலோ ரேஷன் அரிசியை கடத்தி சென்றுள்ளார். அப்போது புதுக்கோட்டை குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவினர் அவரை கைது செய்து, சரக்கு ஆட்டோ மற்றும் கடத்திய ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News