உள்ளூர் செய்திகள்
- பொன்னமராவதியில் கபாடி போட்டி நடைபெற்றது
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே ஆலவயல் பெரியஊரணி விநாயகர் கோயில் திடலில் 3 - ஆண்டு கபாடிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், மதுரை, திண்டுக்கல் , கரூர் ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த அணி வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் வெற்றிபெற்ற அணியினருக்கு ஒன்றியக்குழுத்தலைவர் சுதாஅடைக்கலமணி, துணைசேர்மன் தனலெட்சுமிஅழகப்பன், ஊராட்சித்தலைவர் சந்திராசக்திவேல், ஆகியோர் வெற்றிக்கோப்பை மற்றும் சிறப்பு பரிசு வழங்கப்பட்டது.