உள்ளூர் செய்திகள்

உணவுப் பொருட்கள் சரியான அளவில் வழங்க கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2022-07-30 14:02 IST   |   Update On 2022-07-30 14:02:00 IST
  • உணவுப் பொருட்கள் சரியான அளவில் வழங்க கலெக்டர் அறிவுறுத்தினார்.
  • பொதுவிநியோகம் திட்டம் குறித்து காலாண்டு கூட்டம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், பொதுவிநியோகம் திட்டம் குறித்த, மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுக் கூட்டம் மற்றும் தன்னார்வ நுகர்வோ ர் அமைப்புகளுடனான 2-வது காலாண்டு கூட்டம், மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் குடும்ப அட்டைதாரர்கள் பொதுவிநியோகம் திட்டம் குறித்த புகார்களை 1967 மற்றும் 1800 4255 901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி வழியே புகார் தெரிவிக்கும் வகையில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மொத்த குடும்ப அட்டைகளின் எண்ணிக்கைகள் குறித்தும், நடப்பு காலாண்டில் வழங்கப்பட்ட புதிய மின்னணு குடும்ப அட்டைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, நியாயவிலைக் கடைகளை இரண்டாக பிரித்து புதிய பகுதிநேர அங்காடி அமைப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

மேலும் அனைத்து நியாயவிலைக்கடைகளில் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விபரங்கள், விலைப் பட்டியல், அங்காடி வேலை நேரம் மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் பெயர்கள் மற்றும் அலைபேசி எண்கள் உள்ளிட்டவைகள் காட்சிப்ப டுத்தப்பட்டுள்ளனவா என்பது குறித்தும் மாவட்ட கலெக்டர் கவிதா ராமு கேட்டறிந்தார்.

அதனைத் தொடர்ந்து, கலெக்டர் தலைமையில் நடைபெற்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்புகளுடனான 2வது காலாண்டு கூட்டத்தில், பொதுமக்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

உணவுப் பொருட்களை சரியான அளவிலும், தரத்திலும் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் ஆர்.கணேசன், மத்திய கூட்டுறவு மேலாண்மை இயக்குநர் தனலட்சுமி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்த், துணைப் பதிவாளர் (பொ) அப்துல் சலீம் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News