உள்ளூர் செய்திகள்
குடும்பத்தகராறில் தீக்குளித்த கணவர் சாவு
- குடும்பத்தகராறில் தீக்குளித்த கணவர் உயிரிழந்தார்
- ஒரு மாதகாலமாக பணி ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார்.
புதுக்கோட்டை:
பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் கருமங்காடு பகுதியை சார்ந்தவர் அழகப்பன். இவருக்கு நிரோஷா என்ற மனைவியும் இரண்டு ஆண்குழந்தைகளும் உள்ளனர். அழகப்பன் ஈரோட்டில் கூலி வேலை பார்த்துவந்துள்ளார். கடந்த ஒரு மாதகாலமாக பணி ஏதும் இல்லாததால் வீட்டில் இருந்துள்ளார். இதனால் குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த அழகப்பன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் 90 சதவீத தீக்காயத்துடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அழகப்பன். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பொன்னமராவதி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.