உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியை பூட்டியவர் கைது

Published On 2022-06-16 14:30 IST   |   Update On 2022-06-16 14:30:00 IST
  • அரசு பள்ளியை பூட்டியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
  • தந்தையின் வேலை பறிபோனதால் ஆத்திரம்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட தட்டாஊர ணி பகுதியில் கடந்த 28 ஆண்டுகளாக ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள் ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளிக்கான இடத்தை அப்போது பிச்சையா என்பவர் தானமாக பத்திரப்பதிவு செய்து பள்ளிக்கு கொடுத்துள்ளார்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட பள்ளி அமைந்துள்ள இடம் தனது இடம் என பிச்சையாவின் மகன் சின்னையா கூறி நேற்று பள்ளிக்கு பூட்டு போட்டுள்ளார்.

இதனால் பள்ளிக் கு வந்த குழந்தைகள் அனைவரும் மரத்தடியில் அமர்ந்திருந்தனர். இதனை அறிந்த கறம்பக்குடி தாசில்தார் விஸ்வநாதன் மற்றும் போலீசார் விரைந்து வந்து சின்னையாவிடம் பேச்சுவார்த்தை நடத் சாவியை வாங்கி பூட்டை திறந்தனர். தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் போலீசார் சினையனை கைது செய்து விசாரணை நடத்தினர்.

முதல்கட்ட விசாரணையில் இந்த பள்ளி நிலத்தை தனது தந்தை தானமாக வழங்கியதற்காக அவருக்கு கறம்ப க்குடி பேரூராட்சியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர் பதவி வழங்கப்பட்டது.

ஆனால் அவர் அந்த பணியை சரி வர செய்யாததால் அந்த பதவியிலிருந்து அவரை நீக்கம் செய்ய அதிகா ரிகள் முடிவை எடுத்ததாகவும் இதனால் விரக்தி அடைந்த சின்னையா ப ள்ளிக்கு பூட்டு போட்டு உள்ளதாகவும் தெரியவந்தது.

Tags:    

Similar News