உள்ளூர் செய்திகள்
ஆலங்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது
- ஆலங்குடி அருகே கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்
- அவரிடமிருந்து 2 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 30 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆலங்குடி:
ஆலங்குடி அருகே கஞ்சா பொட்டளங்கள் வைத்து விற்பதாக ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி அருகே மீமிசல் தேந்தான்குளம் ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த திருஞானம் மகன் மகேஷ் (வயது 51) என்பவர் கஞ்சா விற்று வந்தார். இந்நிலையில் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணமல்லி மற்றும் மீட்பு போலீசார் மகேைஷ கைது செய்து அவரிடமிருந்த 2 கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் ரூபாய் 30 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர் மீது ஆலங்குடி மது விலக்கு போலீஸ் பதிவு செய்து ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.