உள்ளூர் செய்திகள்
- பூ வியாபாரி தற்கொலை செய்து கொண்டார்
- மதுவிற்கு அடிமையாகியுள்ளார்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி இந்திரா நகரில் உள்ள புள்ளி காரன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் முருகையா என்ற முருகேஷ் (வயது32). பூ வியாபாரியான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. மதுவிற்கு அடிமையான முருகேஷ் சம்பவத்தன்று வீட்டில் தனது மனைவி சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து அறிந்த போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.