உள்ளூர் செய்திகள்
- விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
- வயிற்று வலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள பெரியநாயகிபு ரத்தை சேர்ந்த சுப்பையா மகன் லோகநாதன் (வயது 47) விவசாயியான இவருக்கு அவ்வப்போது வயிற்று வலி இருந்து வந்ததாக கூற ப்படுகிறது.
இந்நிலையில் சம்பவத்தன்று வலி அதிகமாக இருந்ததால், மனவிரக்தியில் பூச்சி மருந்ததை மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு தஞ்சாவூர் அரசு மருத்து வ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக லோகநாதன் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து சப். இன்ஸ்பெக்டர் பாலசுப் பிரமணியன் வழக்குப்பதிவு செய்து மேல் விசரானை நடத்தி வருகிறார்.