உள்ளூர் செய்திகள்

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Published On 2022-08-04 08:18 GMT   |   Update On 2022-08-04 08:18 GMT
  • வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்
  • உருட்டுக்கட்டையால் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர்

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா கோலேந்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மனைவி ராணி (வயது 45). இவர்களுக்கு 20 வயதில் மகன் ஒருவர் உள்ளார். இவர் அமரடக்கியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் சங்கர் மற்றும் ராணி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பக்கவாட்டு கதவை உடைத்து உள்ளே வந்த மர்ம நபர்கள், ராணி கழுத்தில் இருந்த தங்க சங்கிலியை பறித்துள்ளனர்.

அப்போது விழித்துக் கொண்ட அவர்கள், மர்ம நபர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த உருட்டுக்கட்டையால் அவர்களை த ாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் காயமடைந்த தம்பதியர் உடனடியாக மீமிசல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியரை தாக்கிவிட்டு மர்ம நபர்கள் தாலி சங்கிலியை பறித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News